மது பழக்கத்திலிருந்து எத்தனை நபர்களை அதில் இருந்து மீட்க வேண்டும் என்பது தான் நோக்கம் - அமைச்சர் சு.முத்துசாமி

மது பழக்கத்திலிருந்து எத்தனை நபர்களை அதில் இருந்து மீட்க வேண்டும் என்பது தான் நோக்கம் - அமைச்சர் சு.முத்துசாமி

அமைச்சர் முத்துசாமி

மது பழக்கத்திலிருந்து எத்தனை நபர்களை அதில் இருந்து மீட்க வேண்டும் என்பது தான் நோக்கம் என அமைச்சர் சு.முத்துசாமி பேச்சு
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு சோலாரில் ஆதரவற்றோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகளை வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்சு.முத்துசாமி , திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் 127 இடங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளோம் என்றார். வரும் 1 ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் இன்னும் முடிவாகவில்லை என்றும் அதற்கான டெண்டர் வைத்துள்ளதாகவும் , முடிவு செய்யப்படவில்லை என்றும் விரைவில் இத்திட்டம் வரும் என்ற அமைச்சர் முத்துசாமி , எத்தனை டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என்பதல்ல , எத்தனை நபர்களை அதில் இருந்து மீட்க வேண்டும் என்பது தான் நோக்கம் என்றார்.

Tags

Next Story