கட்டுமரம் மூழ்கி கடலில் மாயமானவரின் உடல் கரை ஒதுங்கியது

கட்டுமரம் மூழ்கி கடலில் மாயமானவரின் உடல் கரை ஒதுங்கியது

பலியான மீனவர்

விழுப்புரத்தில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் கடலில் மூழ்கி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே செட்டிநகர் குப்பம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 60). இவர் நேற்று முன்தினம் அதிகாலை தனக்கு சொந்தமான கட்டுமரத்தில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றார். அப்போது கடலில் மூழ்கிய கிருஷ்ணன் மாயமானார். இதனைப் பார்த்த அப்பகுதி மீனவர்கள் பத்துக்கு மேற்பட்ட விசைப்பலகை சென்று கடலில் மாயமான கிருஷ்ணனை தொடர்ந்து தேடி வந்தனர்.

இந்நிலையில் கடலில் மூழ்கி மாயமான கிறிஸ்துவின் உடல் நேற்று கூனிமேடு குப்பம் அருகில் கரை ஒதுங்கியது. இதனைப் பார்த்த அப்பகுதி மீனவர்கள் மரக்காண காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கரை ஒதுங்கிய கிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனக செட்டி குளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து அவரது உறவினர்கள் மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story