துபாயில் இறந்தவரின் உடல் விமானம் மூலம் திருச்சி வந்தது

துபாயில் இறந்தவரின் உடல் விமானம் மூலம் திருச்சி வந்தது

பைல் படம்


கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தை சேர்ந்த பழனிவேல் துபாயில் நெஞ்சுவலியால் திடீரென இறந்தார். இறந்தவரின் உடல் விமானம் மூலம் திருச்சி வந்தது
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தை சேர்ந்தவர் பழனிவேல் (41). இவர் துபாயில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் நெஞ்சுவலியால் திடீரென இறந்தார். இதனையடுத்து அவரது உடல் திருச்சி ஜமால் முகமது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் நல்லுள்ளங்கள் அமைப்பின் நிர்வாகி பேராசிரியர் செய்யது முகம்மது தலைமையிலான குழுவினர் உதவியால் துபாயில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு பழனிவேலின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story