ராணுவ வீரர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்!

ராணுவ வீரர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்!

 அரசு மரியாதை

மகாராஷ்டிராவில் விபத்தில் உயிரிழந்த அணைக்கட்டைச் சேர்ந்த ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டம் கம்பேடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 8 ராணுவ வீரர்கள் சென்ற ஆட்டோவின் மீது பஸ் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் விக்னேஷ் உட்பட 3 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 5 இராணுவ வீரர்கள் பலத்த காயங்களுடன் அங்கு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் விபத்தில் சிக்கி பலியான இராணுவ வீரர் விக்னேஷ் உடலை விமானம் மூலம் மகாராஷ்டிராவிலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த புலிமேடு கிராமத்தில் உள்ள அவரது சொந்த வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து இராணுவ வீரர் விக்னேஷ் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்பு விக்னேஷ் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடியை அவரது தாயாரிடம் ராணுவ வீரர்கள் வழங்கினர்.

Tags

Next Story