குடும்ப பிரச்சனையால் சிறுவன் தற்கொலை

குடும்ப பிரச்சனையால் சிறுவன் தற்கொலை
ஆலங்குளத்தில் சிறுவன் விஷம் குடித்து பலி போலீசார் விசாரணை
தென்காசி மாவட்டம், மாறாந்தை கள்ளத்திகுளம் பகுதியை சேர்ந்த சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தை கள்ளத்திகுளத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (16). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார் . இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் தமிழ்ச்செல்வனே மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று மாலையில் பரிதாபமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story