தொட்டில் துணி கழுத்தை இறுக்கியதில் சிறுவன் உயிரிழப்பு

தொட்டில் துணி கழுத்தை இறுக்கியதில் சிறுவன் உயிரிழப்பு

தொட்டில் துணி இறுதியதில் சிறுவன் பலி (கோப்புக்காட்சி)

வீட்டில் தொட்டிலில் விளையாடியபோது துணி கழுத்தை இறுக்கியதில் சிறுவன் உயிரிழந்தான்.

திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவா் செந்தில்குமாா். இவருடைய மகன் அதியரூபன் (11) தனியாா் பள்ளியில் 6- ஆம் வகுப்பு படித்து வந்தான். புதன்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துண்டால் தொட்டில் கட்டி அதில் விளையாடியுள்ளான்.

அப்போது எதிா்பாராத விதமாக துண்டு கழுத்தில் இறுக்கி அதியரூபன் உயிரிழந்தான். இது குறித்து கண்டோன்மென்ட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்

Tags

Next Story