இடிந்து விழும் நிலையில் பாலம்

இடிந்து விழும் நிலையில் பாலம்

நாகை மாவட்டம் நரிமேனி ஆற்றின் குறுக்கே எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் ஆபத்தான பாலம் உள்ளது.


நாகை மாவட்டம் நரிமேனி ஆற்றின் குறுக்கே எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் ஆபத்தான பாலம் உள்ளது.

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் ஊராட்சி சேந்தமங்கலம் நரிமேனி ஆற்றின் குறுக்கே எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் ஆபத்தான பாலத்தை இடிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை சேந்தமங்கலம் நரிமேனி ஆற்றின் குறுக்கே எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் ஆபத்தான பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் அமைக்கப்படுமா? என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இடிந்து விழும் நிலையில் பாலம் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் ஊராட்சி சேந்தமங்கலம் நரிமேனி ஆற்றின் குறுக்கே சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பழைய பாலம் உள்ளது.இந்த பாலம் வழியாக சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் திருக்கண்ணபுரம் சென்று வரவும் அப்பகுதியை சேர்ந்த பள்ளி,கல்லூரி மாணவ மாணவியர்கள் சென்று வரவும் இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.அதேபோல் அப்பகுதி விவசாயிகள் தங்கள் விளைவித்த விளைபொருட்களை வாகனங்களில் ஏற்றி செல்வதற்கும் இந்த பாலத்தை பயன்படுத்துகின்றனர்.

போக்குவரத்துக்கு முக்கியமாக உள்ள இப்பாலம் சேதமடைந்து அடிப்பகுதியில் சிமெண்ட் காரைகள் முழுவதும் பெயர்ந்து இரும்பு கம்பியில் வெளியே தெரிகிறது. இதனால் பாலம் இந்நேரத்திலும் இடிந்து விழுந்து விபத்துக்களை ஏற்படுத்தும் அபாய நிலை உள்ளது. நடவடிக்கை இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிலும் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு ஆபத்தான நிலையில் உள்ள பாலத்தை இடித்து விட்டு அதே இடத்தில் புதிய பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து காத்துள்ளனர்.

Tags

Next Story