பேரிகை அருகே கோயில் பொருள்களை திருடிச் சென்ற மா்மநபா்கள்

பேரிகை அருகே கோயில் பொருள்களை திருடிச் சென்ற மா்மநபா்கள்
பேரிகை அருகே கோயில் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

பேரிகை அருகே கோயில் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா் ஓசூர்: பேரிகை அருகே அத்திமுகத்தில் கோயில் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். பேரிகை அடுத்த அத்திமுகத்தைச் சோ்ந்தவா் வேணுகோபால் (59). இவா், அதே பகுதியில் உள்ள இரவகேஸ்வரா் கோயிலில் பூசாரியாக உள்ளாா். கடந்த மே 16 ஆம்தேதி இரவு வழக்கம் போல கோயிலைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாா்.

மறுநாள் காலை கோயிலைத் திறக்க சென்றபோது கோயில் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த பூஜை சாமான்கள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் பேரிகை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags

Next Story