பேருந்தை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்

பேருந்தை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்

பேருந்தை சிறைபிடித்து போராட்டம்

கள்ளக்குறிச்சி அருகில் அரசு பேருந்தை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கச்சிராயபாளையம் அடுத்த கரடிசித்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் மகன் திரிசங்கு, 29; மது போதையில் இருந்த திரிசங்கு, நேற்று முன்தினம் மாலை 7மணி அளவில் கரடிசித்துார் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் வந்த தனியார் கல்லுாரி மற்றும் பள்ளி பஸ்களை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டு வந்ததுடன் அந்த பஸ்களின் வாகன ஓட்டுனர்களையும் கடுமையாக தாக்கியுள்ளார். இதுகுறித்து நேற்று முன்தினம் இரவு கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில்‌ புகார் அளிக்கப்பட்டது. இதனை கச்சிராயபாளையம் காவல் துறையினர் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டி வந்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த கல்லுாரி மாணவர்கள், அவரது பெற்றோர்கள் நேற்று காலை 8:00மணி அளவில் கரடிசித்துார் எம்.ஜி.ஆர்., சிலை அருகே வந்த டவுன் பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு அங்கு விரைந்து வந்த கச்சராபாளையம் போலீசார் சமாதானம் செய்ததை தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags

Next Story