மாலை 6 மணியுடன் முடிவடையும் பிரச்சாரம் !

மாலை 6 மணியுடன்  முடிவடையும் பிரச்சாரம் !

இறுதிக்கட்ட பிரச்சாரம்

திண்டுக்கல்லில் இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவடைகிறது. கட்சியினர் நேற்று முதல் பணப்பட்டுவாடாவை துவக்கியுள்ளனர்.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியை பொறுத்தவரையில் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மா.கம்யூ., அ.தி.மு.க., பா.ம.க., மற்றும் நாம் தமிழர் கட்சி பிரதானமாக உள்ளன.லோக்சபா தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைவதால் இறுதிகட்ட ஓட்டு சேகரிப்பு பணியை வேட்பாளர்கள் தீவிரப்படுத்தி உள்ளன. இந்நிலையில், சிலரால் கடைசி ஆயுதமான பணம் விநியோகமும் தொடங்கி விட்டது. ஏரியாக்களுக்கு தகுந்தவாறு விநியோகம் நடக்கிறது. கிராமப்பகுதிகளில் அதிகாலையிலே இதற்கான பணிகள் நடக்கின்றன. நகர் பகுதிகளில் மதிய நேரங்களில் வீடு, வீடாக சென்று சத்தமில்லாமல் விநியோகம் நடக்கிறது. இது பொதுமக்களிடம் வியப்பை ஏற்படுத்தி வருகிறது.

Tags

Next Story