தீப்பிடித்து எரிந்தது கார் ஐந்து பேர் தப்பினர்!

தீப்பிடித்து எரிந்தது கார் ஐந்து பேர் தப்பினர்!

கந்தர்வகோட்டையில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் காரில் இருந்த 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


கந்தர்வகோட்டையில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் காரில் இருந்த 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
புதுக்கோட்டை: திருச்சியிலிருந்து காரைக்குடி நோக்கிச் சென்ற கார் ஒன்று நல்லூர் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது. திருச்சி அண்ணா நகரைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவருடன் 4 பேர், மாருதி ஆல்டோ காரில் திங்கள்கிழமை பகலில் காரைக்குடி நோக்கிச் சென்றனர். கீரனூர் அருகே நல்லூர் வீரம்பட்டி விலக்கு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, காரிலிருந்து திடீரெனப் புகை வந்துள்ளது. இதைத் தொடர்ந்து காரை நிறுத்திவிட்டு அனைவரும் இறங்கியுள்ளனர். பின்னர், கார் மளமளவென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தகவலறிந்து வந்த கீரனூர் தீயணைப்பு மீட்புப் படையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். என்றாலும், கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த விபத்து குறித்து கீரனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story