கணவன்- மனைவியை தாக்கிய கார் டிரைவர் கைது!

கணவன்- மனைவியை தாக்கிய கார் டிரைவர் கைது!

வந்தவாசி அருகே கணவன்- மனைவியை தாக்கிய கார் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


வந்தவாசி அருகே கணவன்- மனைவியை தாக்கிய கார் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பொன்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி லட்சுமி (வயது 48). இவர் மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு சென்றபோது அதே கிராமத்தை சேர்ந்த கவாஸ்கர் (38) என்பவர் காரை வேகமாக ஓட்டி லட்சுமியின் மீது மோதுவது போல் வந்துள்ளார். இதுகுறித்து கேட்ட லட்சுமியை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். மேலும் லட்சுமி வீட்டுக்கு சென்று அவருடைய கணவர் சீனிவாசனை தாக்கியுள்ளார். தடுக்க வந்த லட்சுமியையும் தாக்கி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து பொன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவரை கைது செய்தனர்.

Tags

Next Story