பஞ்சரால் தாறுமாறாக வந்த கார் - இந்து மகா சபா தலைவரின் கார் சேதம்

பஞ்சரால் தாறுமாறாக வந்த கார்  - இந்து மகா சபா தலைவரின்  கார் சேதம்

சேதமடைந்த கார் 

இந்து மகாசபாவின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியம். குமரி மாவட்டத்தை சேர்ந்த இவர் நேற்று பகல் நாகர்கோவில் கட்டபொம்மன் சந்திப்பில் இருந்து ஒழுகினசேரி செல்லும் ரோட்டில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். காரை டிரைவர் ஓட்டினார். பாலசுப்பிரமணியம் முன் இருக்கையில் அமர்ந்து இருந்தார். தீயணைப்பு நிலையம் அருகே கார் சென்ற போது எதிரே வந்த ஒரு கார் எதிர்பாராதவிதமாக மோதியது. அந்த கார் திடீரென பஞ்சரானதால் தாறு மாறாக ஓடி விபத்தை ஏற்படுத்தி உள்ளது. பாலசுப்பிரமணியம் வந்த கார் மீது பயங்கரமாக மோதியதோடு மட்டுமல்லாது பஞ்சரான அந்த கார் நேராக தீயணைப்பு நிலைய காம்பவுண்ட் சுவர் மீதும் மோதி நின்றது. இந்த சம்பவத்தில் 2 கார்களும் பலத்த சேதமடைந்தன. ஆனால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இது தொடர்பாக போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story