தாலிக்கு தங்கம் வழங்கும் விழா

தாலிக்கு  தங்கம் வழங்கும் விழா

தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி 

திருப்பூர் மாவட்டம் கொடுவாயில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மகளிர் உரிமை துறையின் சார்பில் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்ட நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் கொடுவாயில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் மு. பெ. சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு தாலிக்கு தங்கம் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதா தேவி மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story