மூதாட்டியிடம் செயின் பறிப்பு

மூதாட்டியிடம் செயின் பறிப்பு

மூதாட்டியிடம் செயின் பறிப்பு

"திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த சின்னநாகபூண்டி, சித்துார் மெயின் சாலையில் வசிப்பவர் ஆனந்தவடிவேலு,71. ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். இவரது மனைவி சாந்தி, 65. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு துாங்கி கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த இரண்டு பீரோவையும் திறந்து பார்த்தனர். அதில் பணம், நகை கிடைக்காததால் சாந்தி கழுத்தில் அணிந்திருந்த, 2 சவரன் தாலி செயினை பறித்து தப்பி சென்றனர். ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story