தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் சங்கிலி பறிப்பு!

தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் சங்கிலி பறிப்பு!

போலீசார் வழக்குப்பதிவு 

தச்சம்பட்டு அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் மர்ம நபர்கள் சங்கிலியை பறித்து சென்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு அடுத்த தேவனூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் இவரது மனைவி ரேவதி (39) வீட்டின் தாழ்வாரத்தில் தூங்கி கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம நபர் ரேவதி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து பால முருகன் கொடுத்த புகாரின் பேரில் தச்சம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story