கொடைக்கானலில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு வந்தடைந்த முதல்வர்

கொடைக்கானலில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு வந்தடைந்த முதல்வர்

கொடைக்கானலுக்கு வந்த முதல்வர்

தமிழ்நாடு முதலமைச்சர் ஸடாலின் ஓய்விற்காக தனது குடும்பத்துடன் பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு சொகுசு வாகனம் மூலம் வந்தடைந்தார்.

நாடாளுமன்ற தேர்தல் கடந்த 19ஆம் தேதி நிறைவடைந்ததை தொடர்ந்து பல்வேறு கட்சி நிர்வாகிகள் குளிர் பிரதேசங்களுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஓய்விற்காக 5 நாட்கள் பயணமாக தனது குடும்பத்துடன் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்த முதலமைச்சர் அங்கு இருந்து வத்தலக்குண்டு மலைச்சாலையில் வாகனம் மூலம் கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு வந்தடைந்தார்.

கடந்த சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த பின்னர் கொடைக்கானலுக்கு ஓய்விற்காக வந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஓய்விற்காக கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் வந்துள்ளார், 5 நாட்கள் தங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் வருகையை தொடர்ந்து மலைச்சாலைகள், நகர்ப்பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 1500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியிலும்,ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர், மேலும் சாலை மார்க்கமாக முதலமைச்சர் வந்த காரணத்தினால் மலைச்சாலைகள் மற்றும் நகர்ப்பகுதிகளில் ஆங்காங்கே வாகனங்கள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டது.

Tags

Next Story