மக்களுடன் முதல்வர் திட்டமுகாம்

மக்களுடன் முதல்வர் திட்டமுகாம் - பெ.ராமலிங்கம் எம்.எல்.ஏ மனுக்கள் பெற்றார்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட 10,11,12,13,16,17,18 வார்டுகளில் உள்ள பொதுமக்களிடம் மனுக்களை பெறும் நிகழ்ச்சி சுப்புலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் தலைமை தாங்கி மனுக்களை பெற்றார். இந்நிகழ்வில் நாமக்கல் நகர்மன்ற தலைவர் கலாநிதி, துணைத் தலைவர் பூபதி, மேற்கு நகர திமுக செயலாளர் சிவக்குமார், கோட்டாச்சியர் சரவணன், நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன், வட்டாட்சியர் சக்திவேல், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஆனந்த்பாபு மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story