தெரு மின்விளக்குகள் பழுது இருளில் மூழ்கியது மின்நகர்

தெரு மின்விளக்குகள் பழுது இருளில் மூழ்கியது மின்நகர்

பழுதடைந்த தெரு மின்விளக்குகளை சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோனேரிகுப்பம் ஊராட்சி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


பழுதடைந்த தெரு மின்விளக்குகளை சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோனேரிகுப்பம் ஊராட்சி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி, மின்நகர் 2வது தெருவில், இரவு நேரத்தில் போதுமான வெளிச்சம் தரும் வகையில், ஊராட்சி நிர்வாகம் 15 மின்கம்பங்கள் உள்ளன. இந்நிலையில், நான்கு நாட்களாக தெரு மின்விளக்குகள் ஒளிரவில்லை. இதனால், அப்பகுதி இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இப்பகுதியில் விஷ ஜந்து நடமாட்டம் உள்ளதால், இரவு நேரத்தில் தெருவில் நடமாட அப்பகுதியினர் அச்சப்படுகின்றனர். மேலும், பணி முடிந்தும் வீடு திரும்பும் பெண்களும், டியூஷன் முடிந்து வரும் பள்ளி, கல்லுாரி மாணவியர் வீட்டிற்கு அச்சத்துடன் வருகின்றனர். இருளை பயன்படுத்தி குற்ற சம்பவம் அரங்கேறும் சூழல் உள்ளது. எனவே, மின்நகர் 2வது தெருவில், பழுதடைந்த தெரு மின்விளக்குகளை சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story