அஞ்சல் வாக்குப்பதிவு செலுத்தும் பணியினை ஆய்வு செய்த கலெக்டர்!

அஞ்சல் வாக்குப்பதிவு செலுத்தும் பணியினை  ஆய்வு செய்த கலெக்டர்!

 ஐ.சா.மெர்சி ரம்யா 

அஞ்சல் வாக்குப்பதிவு செலுத்தும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா இன்று (18.04.2024) பார்வையிட்டார்.
இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், குமரன் பாலிடெக்னிக் கல்லூரியில், பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 தொடர்பாக, 23-கரூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட, 179-விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ள தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள், தங்களுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு செலுத்தும் பணியினை, மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா இன்று (18.04.2024) பார்வையிட்டார். உடன் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு) பெ.வே.சரவணன், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா, வட்டாட்சியர் சூரியபிரபு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Tags

Next Story