ரத்ததான முகாமை தொடங்கி வைத்த ஆட்சியர்!

ரத்ததான முகாமை தொடங்கி வைத்த ஆட்சியர்!

ரத்ததான முகாம்

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்த ரத்ததான முகாமை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
வேலூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடந்தது. அதனை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ச்சியாக ரத்ததானம் வழங்கிய நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் கேடயங்களையும் ஆட்சியர் வழங்கினார். பின்னர், குழந்தைகள் புற நோயாளிகள் பிரிவு பகுதியில் பார்வையிட்ட ஆட்சியில் சிகிச்சைக்கு வந்திருந்த பொது மக்களிடம் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

Tags

Next Story