வரும் 16ம் தேதி திருச்சியில் உள்ளூர் விடுமுறை

வரும் 16ம்  தேதி திருச்சியில் உள்ளூர் விடுமுறை

திருச்சி மாவட்ட ஆட்சியர்

திருச்சி மாவட்டம் , சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் சித்திரைத் தேரோட்ட விழாவை முன்னிட்டு வருகின்ற ஏப்ரல் 16 ம் ந்தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் வருகின்ற 16 ம் ந்தேதி சித்திரை தேரோட்ட விழா நடைபெற உள்ளது. இவ்விழாவையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உத்தரவிட்டு உள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கும் இது பொருந்தும்.இருப்பினும், பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது.

செலவாணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instruments Act, 1881) மாவட்டத்தில் அரசு பாதுகாப்பு தொடர்பான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் கருவூலங்கள் மற்றும் சார்நிலை கருவூலங்களும் குறிப்பிட்ட பணியர்களை கொண்டு செயல்படும். . 2024 பாராளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொருந்தாது. மேற்கண்ட விடுமுறைக்கு பதிலாக வருகி்ன்ற 08-06-2024 சனிக்கிழமை அன்று பணி நான் என அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story