திருவாரூர் : மின் தடையால் பலியான பெண் - விசாரணை குழு அமைப்பு.!

திருவாரூர் : மின் தடையால் பலியான பெண் - விசாரணை குழு அமைப்பு.!

உயிரிழந்த நோயாளி

திருவாரூரில் மின்தடையால் பெண் உயிரிழந்த சம்பவத்தில் மருத்துவ அதிகாரி தலைமையில் குழு அமைத்து விசாரணை
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மானவரம் பகுதியைச் சேர்ந்த அமராவதி (வயது ௪௮) இவர் மூச்சு திணறல் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட மின்தடையால் வென்டிலேட்டர் செயல்படாமல் அவர் உயிரிழந்தார். இது குறித்து மருத்துவ அதிகாரி தலைமையில் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ஜோசப் ராஜ் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது . மருத்துவமனையில் ஏற்பட்ட மின் தடையால் நோயாளி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story