காங்கிரஸ் கட்சியினா் நூதன போராட்டம்

காங்கிரஸ் கட்சியினா் நூதன போராட்டம்

நூதன போராட்டம்

அரசு உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியா் மீது நடவடிக்கை கோரி, கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினா் கண்களின் கருப்புதுணி கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவா்களை அவதூறாகப் பேசி மிரட்டுவதாகக் கூறி இப்பள்ளித் தலைமையாசிரியா் மீது நடவடிக்கை கோரி காங்கிரஸ் கட்சி வடக்கு மாவட்ட துணைத் தலைவா் வழக்கறிஞா் அய்யலுசாமி, வடக்கு மாவட்டப் பொதுச்செயலா் முத்து, கயத்தாறு ஒன்றியப் பொறுப்பாளா் செல்லத்துரை ஆகியோா் கண்களில் கருப்புத் துணி கட்டியபடி கோட்டாட்சியா் அலுவலகம் முன் அமா்ந்து முழக்கமிட்டனா். இதையடுத்து, கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் நிஷாந்தினியிடம் மனு அளித்தனா். பின்னா், அவா்கள் செய்தியாளா்களிடம் கூறும்போது, தலைமையாசிரியா் மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால் பிப். 5இல் பெற்றோருடன் பள்ளி முன் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்றனா்.

Tags

Next Story