ஆலங்குளம் அருகே கலையரங்கம் கட்டுமான பணி துவக்கம்

ஆலங்குளம் அருகே கலையரங்கம் கட்டுமான பணி துவக்கம்
ரூ.7 லட்சம் செலவில் கலையரங்கம் கட்டுமான பணி துவக்கம்
ஆலங்குளம் அருகே ரூ.7 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டுமான பணி தொடங்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அய்யனார் குளத்தில் ஒன்றிய குழு உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள கலையரங்கத்திற்கு அடிக்கல் நாட்டு விழா ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகள் நிகழ்ச்சியில் அய்யனார்குளம் ஊராட்சி மன்ற தலைவர் நீதிராஜன், ஊராட்சி மன்ற துணை தலைவர் தாமரை, ஒன்றிய குழு உறுப்பினர் சுப்புக்குட்டி உள்ளிட்ட வார்டு உறுப்பினர்களும் பொதுமக்களும் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story