செய்யாறு அருகே பயணியர் நிழற் கூடம் கட்டுமான பணி தொடக்கம்

செய்யாறு அருகே  பயணியர் நிழற் கூடம் கட்டுமான பணி தொடக்கம்

காட்டுமான பணி தொடக்கம் 

செய்யாறு அருகே தென் தண்டலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை எதிரில் ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான புதிய பயணியர் நிழற் கூடம் கட்டுமான பணியினை எம் எல் ஏ ஓ. ஜோதி துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த தென் தண்டலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை எதிரில் புதிய பயணிய நிழற்கூடம் கட்டுமான பணி துவக்க விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் தலைமை தாங்கினார்.மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் முன்னிலை வகித்தார்.ஊராட்சி மன்ற தலைவர் முருகன் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக வருகை தந்த எம்எல்ஏ ஒ.ஜோதி தொகுதி சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 6 லட்சம் மதிப்பீட்டில் புதிய நிழற்குடை கட்டுவதற்கான பூமி பூஜையில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். முன்னதாக தென் தண்டலம் ஊராட்சிக்கு உட்பட்ட 34 பட்டாதாரர்களுக்கு புலன் எண் 84 இல் உள்ள வரைபடங்கள் வழங்கும் நிகழ்வும் நடந்தது.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ரவிக்குமார் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுப்பிரமணி, விவசாய உற்பத்தி குழு உறுப்பினர் சிவக்குமார், விவசாய தொழிலாளர் அணி துணைத்தலைவர் ரவி, விளையாட்டு அணி துணை அமைப்பாளர் ஞான முருகன்,மாவட்ட பிரதிநிதிகள் தாஸ், பார்த்திபன், பெருமாள், மனோகரன், ஒன்றிய பொருளாளர் நந்தகுமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story