தார் சாலை பணிகளை துவங்கி வைத்த கவுன்சிலர் !

தார் சாலை பணிகளை துவங்கி வைத்த கவுன்சிலர் !

தார் சாலை

நெல்லை மாநகராட்சி 25வது வார்டு சுவாமி சன்னதித் தெருவில் தார்சாலை பணிகள் நேற்று துவங்கப்பட்டது.

மக்களவை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் அரசு பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் விளக்கப்பட்டுள்ளதால் நெல்லை மாவட்டத்தில் அரசு பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நெல்லை மாநகராட்சி 25வது வார்டு சுவாமி சன்னதித் தெருவில் தார்சாலை பணிகள் நேற்று துவங்கப்பட்டது. மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உத்தரவின் பேரில் கவுன்சிலர் கிட்டு ராமகிருஷ்ணன் இந்த பணிகளை துவக்கி வைத்தார்.

Tags

Next Story