வெடிமருந்தை கடித்த பசுமாடு... விபரீதம்

வேப்பனப்பள்ளி அருகே காட்டுப்பன்றிக்கு வைத்த வெடியில் பசுமாடு கடித்ததில் வாய், முகம் வெடித்து சிதறியது.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள சிகரமாகனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (50) . இவர் தனக்கு சொந்தமான 5 பசுமாடுகளை வளர்த்து வந்துள்ளார். இவர் நேற்று மாலை தனது பசுமாடுகளை வழக்கம் போல மேய்ச்சலுக்காக கிராமத்தின் வனப்பகுதியை ஒட்டியுள்ள திம்மம்மா ஏரி பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மாடு மேய்ச்சலில் இருந்த போது திடீரென்று பயங்கரமாக வெடி சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து ராஜசேகர் பசுமாடு அருகே சென்று பார்த்தபோது அங்கே காட்டு பன்றிக்கு வைத்த வெடியில் மாடு வாய் வைத்ததில் பசுமாட்டின் முகம் வாய் வெடித்து ரத்தம் சாரை சாரையாக கொட்டிய நிலையில் வலியில் துடித்து கொண்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜசேகர் கதறி அழுவதை கண்டு கிராம மக்கள் வேப்பனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.


சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். காட்டுப்பன்றிக்கு வைத்த வெடியில் பசுமாட்டின் முகம் வாய் சிதறியே படுகாயம் அடைந்தால் விவசாயிகள் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story