கிரேன் கவிழ்ந்து ஏற்றுமதி நிறுவன சூப்பர்வைசர் பலி

கிரேன் கவிழ்ந்து ஏற்றுமதி நிறுவன சூப்பர்வைசர் பலி

உயிரிழப்பு 

தூத்துக்குடி துறைமுகத்தில் கிரேன் கவிழ்ந்து விழுந்த விபத்தில் ஏற்றுமதி நிறுவன சூப்பர்வைசர் பரிதாபமாக உயிரிழந்தார். 
தூத்துக்குடி முத்தையாபுரம் தங்கமணி நகரைச் சேர்ந்தவர் பிள்ளை பாண்டி மகன் இசக்கிமுத்து (39). இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள ஒரு தனியார் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார்.நேற்று மதியம் தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் 9வது கப்பல் தளத்தில் கப்பலில் இருந்து நிலக்கரியை கிரேன் மூலம் இறக்கி கொண்டிருந்தனர். அப்போது கிரேன் டயர் பஞ்சர் ஆகி சரிந்து அருகில் நின்று கொண்டிருந்த இசக்கி முத்து மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த இசக்கிமுத்துவை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தெர்மல் நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் பலியான இசக்கிமுத்துக்கு மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த சம்பவம் தூத்துக்குடி துறைமுக ஊழியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story