தாய் கரடியுடன் ஜாலியாக உலா வந்த குட்டி கரடிகள்

தாய் கரடியுடன் குட்டி கரடிகள் உலா வந்தது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே பெரியார் நகர் பகுதியில் சமீப நாட்களாக கரடி, சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த அச்சுமடைந்துள்ள நிலையில் நாள்தோறும் கரடிகள் நடமாட்டம் இருந்து வருகிறது.

நேற்று நள்ளிரவு குட்டிகளுடன் உலா வந்த தாய் கரடியின் சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளன ஏற்கனவே இதே பகுதியில் கருஞ்சிறுத்தை, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் நடமாடி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் கரடிகளின் நடமாட்டமும் அதிகமாக காணப்பட்டு வருவது

மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது மேலும் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கிராம மக்கள் வெளியே நடமாட அச்சமடைந்துள்ளனர்.

Tags

Next Story