நெல்லையில் சிறுவர்களுக்கு பரிசு வழங்கிய துணை மேயர்

நெல்லையில் சிறுவர்களுக்கு பரிசு வழங்கிய துணை மேயர்

பரிசு வழங்கல் 

நெல்லையில் சிறுவர்களுக்கு துணை மேயர் பரிசு வழங்கினார்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நேற்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று இரவு 55வது வார்டு தியாகராஜநகர் பகுதியில் பொங்கல் விழா‌ போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி துணை மேயர் ராஜு கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story