சாத்கர் மலையில் 1700 லிட்டர் கள்ள சாராய ஊரல்கள் அழிப்பு

சாத்கர் மலையில் 1700 லிட்டர் கள்ள சாராய ஊரல்கள் அழிப்பு

சாராய ஊறல் அழிப்பு

சாத்கர் மலையில் கள்ள சாராய ஊரல்களை கண்டுபிடித்து குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் அழித்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் மதுவிலக்கு அமலாக பிரிவு இன்ஸ்பெக்டர் சின்னதுரை தலைமையிலான போலீசார் சாத்கர் மலை, கடம்ப கானாரு, பால் சுனை, கண்ணீர் குட்டை பள்ளம் மற்றும் டங்கா பள்ளம் ஆகிய பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது மலைப்பகுதியில் புதர்களுக்கு அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 1,700 லிட்டர் கள்ள சாராய ஊரல்கள் மற்றும் 150 லிட்டர் கள்ள சாராயம் ஆகியவற்றை கண்டுபிடித்து கீழே கொட்டி அழித்தனர்.

Tags

Next Story