கோவில் உண்டியலில் திருடிய கொலுசு கண்டுபிடிப்பு; போலீசார் விசாரணை

கோவில் உண்டியலில் திருடிய கொலுசு கண்டுபிடிப்பு;  போலீசார் விசாரணை

திருப்புவனம் அருகே கோவில் உண்டியலில் திருடிய கொலுசு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

திருப்புவனம் அருகே கோவில் உண்டியலில் திருடிய கொலுசு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளி அம்மன் கோவிலில் நவம்பர் 8ம் தேதி உண்டியல் காணிக்கை பணம், நகை எண்ணும் போது 4 பவுன் எடை கொண்ட இரு தங்க கொலுசுகள் மாயமானது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது செயல் அலுவலர் வில்வமூர்த்தி அதனை எடுத்தது தெரிய வந்தது. அவரிடமிருந்து ஒரு கொலுசை பறிமுதல் செய்த நிலையில் மற்றொரு கொலுசு அவரது வீட்டின் அருகில் உள்ள வீட்டு மாடியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருப்புவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story