தி. மலை பேருந்து நிலையத்தில் தேர்தல் விழிப்புணர்வு செய்த மாவட்ட ஆட்சியர்

தி. மலை பேருந்து நிலையத்தில் தேர்தல் விழிப்புணர்வு செய்த மாவட்ட ஆட்சியர்

விழிப்புணர்வு பிரச்சாரம்

பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு இந்தியன் வங்கி சார்பில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய இராட்ச பலூனை பறக்கவிட்டும்,

விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்ட விளம்பர சிற்றேடுகளை பேருந்து மற்றும் ஆட்டோக்களில் ஒட்டியும், தேர்தல் விழிப்புணர்வு வாக்காளர் கையேட்டினை பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வழங்கியும் உறுதிமொழி எடுத்துக் கொண்டும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், இஆப., அவர்கள் இன்று (30.03.2024) விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Tags

Next Story