ஆஞ்சநேயர் திருக்கோயில் விழாவையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர்

ஆஞ்சநேயர் திருக்கோயில் விழாவையொட்டி  பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர்

மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா

நாமக்கல் ஆஞ்சநேயர் திருக்கோயில் விழாவையொட்டி வரும் புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், நாமக்கல் நகர்புறத்தில் அமைந்துள்ள அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில் மற்றும் அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில், திருக்குட நன்னீராட்டு பெருவிழா 30.10.2023, 31.10.2023 மற்றும் 01.11.2023 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இத்திருக்குட நன்னீராட்டு பெருவிழாவில் நாமக்கல் மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களைச் சார்ந்த பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 01.11.2023 புதன்கிழமை அன்று (ஒரு நாள் மட்டும்) நாமக்கல் வட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும் / சுயநிதி / மெட்ரிக் / சிபிஎஸ்சி தொடக்க / நடுநிலை / உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story