கடையநல்லூர் அருகே புதிய கால்நடை மருந்தகம் திறப்பு !

கடையநல்லூர் அருகே புதிய கால்நடை மருந்தகம் திறப்பு !
 கால்நடை மருந்தகம் திறப்பு
கடையநல்லூர் அருகே புதிய கால்நடை மருந்தகம் கடையை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் கிராமத்தில் ரூ-34.50 இலட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தகம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமை வகித்து புதிய கட்டிடத்தை திறந்து வைத்து வாழ்த்தி பேசினார். இந்த நிகழ்ச்சிகள் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதயகிருஷ்ணன், யூனியன் சேர்மன் சுப்பம்மாள், துணை சேர்மன் ஐவேந்திரன்தினேஷ் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story