உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்.

உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்.

உலக எய்ட்ஸ் தினம் 

கோவை: ஆண்டுதோறும் டிசம்பர் 1-ம் தேதி உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது.இதனை முன்னிட்டு அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதன் ஒரு பகுதியாக இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இதனை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்நிகழ்வில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தில் மாவட்ட ஆட்சியர்,அலுவலர்கள், பல்வேறு அமைப்பினர் கையெழுத்திட்டனர்.மேலும் இந்த பேரணியில் எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவர்கள் தங்களது முகத்தில் ஓவியம் வரைந்து இருந்தனர்.இப்பேரணியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட கல்லூரி,பள்ளி மாணவர்கள் மற்றும் செவிலியர் பயிற்சி மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்வின் போது எய்ட்ஸ் நோய் குறித்து ஆட்சியர் முன்னிலையில் உறுதி மொழி எடுத்து கொள்ளப்பட்டது.

Tags

Next Story