தூய்மைப்படுத்தும் பணியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

தூய்மைப்படுத்தும் பணியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

தூய்மை பணி

செங்கல்பட்டு மாவட்டம், கோவளம் கடற்கரையில் தூய்மைபடுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், கோவளம் ஊராட்சி மன்றம் மற்றும் இ ஐ எக்ஸ்னோரா தொண்டு நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பின் சார்பில் நேற்றைய தினம் கோவளம் கடற்கரை பகுதியில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. கோவளம் ஊராட்சி மன்ற தலைவர் சோபனா சுந்தர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் பங்கேற்று தூய்மைப்படுத்தும் பணியினை துவக்கி வைத்தார். கடற்கரை ஓரப்பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றியும் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்தக் கூடாது என பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்தவர்,

நெகிழி உள்ளிட்ட பொருட்களை கடற்கரை ஓரங்களில் போடுவதால் கடலின் நிறம் மாறி மாசாகி விடுகிறது இயற்கையை காக்கும் வகையிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் சப் கலெக்டர் நாராயண சர்மா, பி டி ஓ சிவகலைச்செல்வன் உள்ளிட்டோருடன் வருவாய்த்துறை அதிகாரிகள் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் தனியார் தொண்டு நிறுவன பொறுப்பாளர்கள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story