வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

வளர்ச்சி திட்டப்பணிகளை  ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர் ஆய்வு
மேலநீலிதநல்லூரில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் ஆய்வு செய்தார்.
தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் வட்டார பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை நேற்று மதியம் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கிருந்த அரசு அதிகாரிகளிடம் திட்ட பணிகள் குறித்த விபரங்களை கேட்டறிந்து சிறப்பாக செயல்பட வேண்டுமென ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின்போது அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story