அரசு பள்ளியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

நாகதாசம்பட்டி பிளியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தினை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் இன்று தமிழக முதலமைச்சரின் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த நிலையில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி ஐஏஎஸ் அவர்கள் பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட நாகதாசம்பட்டி பிளியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தினை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது அங்கன்வாடி மைய சமையல் கூடம் மற்றும் நடுநிலைப்பள்ளி பள்ளியறைகள் தலைமை ஆசிரியர் வரை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். பின்பு மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார் இந்த ஆய்வின்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அங்கன்வாடி மைய ஊழியர்கள் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உட்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story