பொதுமக்களிடம் மனுக்கள் பெற்ற மாவட்ட ஆட்சியர்

பொதுமக்களிடம் மனுக்கள் பெற்ற மாவட்ட ஆட்சியர்
பொதுமக்களிடம் மனுக்கள் பெற்ற மாவட்ட ஆட்சியர்
செங்கல்பட்டில் பொதுமக்களிடம் மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றார்.

செங்கல்பட்டு மாவட்டம்,காட்டாங்குளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில் " திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச. அருண் ராஜ் அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

வளர்ச்சியின் அடையாளமாக அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ,கூடுதல் ஆட்சியர், காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன் ,காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் லோகநாதன் ,ஊராட்சி மன்ற தலைவர்கள் ,ஒன்றிய கவுன்சிலர்கள், அரசு அலுவலர்கள், திமுக நிர்வாகிகள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story