திருப்பத்தூரில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்து பாராட்டு

திருப்பத்தூரில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்து பாராட்டு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

மண்டல அளவில் நடைபெற்ற காவலருக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்து பாராட்டு
திருப்பத்தூர் மாவட்டம் மண்டல அளவில் நடைபெற்ற காவலருக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்து பாராட்டு 63-வது மண்டல அளவிலான காவலருக்கான தடகள போட்டிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் நடந்தது. இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பணியாற்றும் காவல்துறையினர் 3000 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் குண்டு எறிதல் போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை வென்றனர். இதில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆய்வாளர் ராணி குண்டு எறிதல் போட்டியில் தங்கப்பதக்கமும் ஆயுதப்படை காவலர் ஹரிகிருஷ்ணன் 3000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கல பதக்கமும் வென்றனர். போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை வென்ற காவலர்களை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேரில் அழைத்து பாராட்டினார்.

Tags

Next Story