மக்கள் விரோத அரசாக திமுக அரசு செயல்படுகிறது - ஜி.கே.வாசன்

மக்கள் விரோத அரசாக திமுக அரசு செயல்படுகிறது - ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன் பிரசாரம் 

திமுக அரசு மக்கள் விரோத அரசாக ,மக்கள் எண்ணங்களை பிரதிபலிக்க தவறிய அரசாக, மக்களின் மீது சுமையை ஏற்றும் அரசாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என சென்னிமலையில் நடந்த பிரசாரத்தின் போது ஜி.கே.வாசன் பேசினார்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் ஈரோடு மக்களவைத் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜயகுமாரை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் ஜி கே வாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பிரச்சாரம் மேற்கொண்டரா்.

அப்போது பேசிய ஜி.கே.வாசன் , திருப்பூர் சாயக்கழிவால் பாதிக்கப்பட்டுள்ள நொய்யல் ஒரத்துப்பாளையம் அணை கழிவு நீரை ஒருங்கிணைத்து பெருந்துறை சிப்காட்டை முறையாக சுத்திகரிப்பு ஆலை நிறுவி தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்வோம் என்றார் . மீண்டும் மோடி தலைமையிலான மத்திய அரசு மூன்றாவது முறை ஆட்சி அமைக்க வேண்டும். பல்வேறு திட்டங்களை மத்திய அரசு கொடுத்து அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களை உயர்த்திக் கொண்டு இருப்பதாகவும் , இதற்கு நேர் மாறாக திமுக அரசு மக்கள் விரோத அரசாக மக்கள் எண்ணங்களை பிரதிபலிக்க தவறிய அரசாக மக்களின் மீது சுமையை ஏற்றும் அரசாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்றார். தேர்தலில் மக்கள் விரோத திமுகவிற்கு முற்றுப்புள்ளி வைக்க பேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்

Tags

Next Story