சிறுமியை கடித்து குதறிய நாய்கள்

சிறுமியை கடித்து குதறிய நாய்கள்

பைல் படம் 

தென்காசி அடுத்த அச்சன்புதூரில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை 10க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்து குதறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் பகுதியில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த மனிஷா (8) என்ற சிறுமியை 10க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அந்த சிறுமி பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட மனிஷா, தென்காசி அரசு மருத்துவமணையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்பகுதி பொதுமக்கள் தெரு நாய்கள் குறித்து பலமுறை புகார் தெரிவித்தும், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர் வேதனை தெரிவித்தனர். உடனே சம்பந்தப்பட்ட அதிகாரியில் விரைந்து சென்று அப்பகுதியில் சுற்றித் திரியும் நாய்களைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்தனர்.

Tags

Next Story