வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை

பைல் படம் 

மைலம்பட்டி அருகே எலக்ட்ரீசியன் வீட்டின் கதவை உடைத்து ரூ.2.30 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம்,கடவூர் தாலுக்கா, மைலம்பட்டி அருகே உள்ள நாவல்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் வயது 38. இவர் அப்பகுதியில் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், ஜனவரி நான்காம் தேதி காலை 9 மணி அளவில் சொந்த வேலையாக வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் மாலை 4 மணிக்கு வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 12 பவுன் தங்க நகை, ரூபாய் 50,000 களவாடப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து, சிந்தாமணிப்பட்டி காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்ட போது, அங்கு பல்வேறு தடயங்கள் கிடைக்கப்பெற்றது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சிந்தாமணிப்பட்டி காவல்துறையினர்.

Tags

Next Story