நண்பர்களுடன் மது குடித்தபோது கிணற்றில் தவறி விழுந்து டிரைவர் பலி

நண்பர்களுடன் மது குடித்தபோது கிணற்றில் தவறி விழுந்து டிரைவர் பலி

மரணம் 

சேலத்தில் நண்பர்களுடன் மது குடித்தபோது கிணற்றில் தவறி விழுந்து டிரைவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் பெரிய கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 28). டிரைவர். இவர் நேற்று இரவு நண்பர்களுடன் அங்குள்ள கிணற்றின் மீது அமர்ந்து மது குடித்து கொண்டு இருந்தார். அப்போது மதுபோதையில் அவர் நிலைதடுமாறி கிணற்றில் விழுந்து இறந்தார். இது குறித்து கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கன்னங்குறிச்சி போலீசார் மற்றும் செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர்.

அவர்கள் பிரசாந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story