டிரைவர் தூங்கியதால் மினி பஸ் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து

பர்கூர் பகுதியில் டிரைவர் தூங்கியதால் சென்டர் மீடியனில் மோதிய மினி பஸ் தலைகுப்புற கவிழ்ந்ததில் 22பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னையில் இருந்து ஒகேனக்கல் சுற்றுலா வந்த மினி பஸ் கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூர் அரசு பொறியில் கல்லூரி அருகே டிரைவர் தூங்கியதால் தடுப்பு சுவர் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்து. 22 பேர் படு காயம். கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி. சென்னை அம்பத்தூரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த சுமார் டிரைவர் உட்பட சுமார் 23 பேர் மினி பஸ்ஸில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்ளுக்கு சுற்றுலா புறப்பட்டனர். கிருஷ்ணகிரி அருகே பருகூர் அரசு பொறியியல் கல்லூரி ஏதிரே வந்தப்போது டிரைவர் தூங்கியதால் சென்டர் மீடியனில் மோதிய மினி பஸ் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளனது.

இந்த விபத்தில் ஆண்கள் பெண்கள் என 22 பேர் படுக்கயம் அடைந்தனர். விரைந்து சென்ற பருகூர் போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மறுத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story