கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல் டிரைவர் கைது

கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல் டிரைவர் கைது

மண் கடத்திய லாரி பறிமுதல் டிரைவர் கைது

அன்னவாசல் அருகே பொய்க்காடிப்பட்டியில் கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார் அதன் டிரைவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அன்னவாசல் அருகே உள்ள போய்காடி பட்டியில் பகுதியில் கிராவல் மண் கடத்துவதாக மாவட்ட சிறப்பு படை போலீஸ் யாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சிறப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை மறித்து சோதனை செய்தபோது அதில் உரிய அனுமதியின்றி கிராவல் மண் கடத்தி செல்வது தெரிய வந்தது. இதையடுத்து கிராவல் மண்ணை கடத்தி வந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார் அதன் டிரைவர் கூடலூரை சேர்ந்த தங்கவேலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக லாரி உரிமையாளர் அழகர்சாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story