டிரைவரை கல்லால் தாக்கி பணம் பறிப்பு - வாலிபர் கைது

டிரைவரை கல்லால் தாக்கி பணம் பறிப்பு - வாலிபர் கைது
பைல் படம்
அஞ்சு கிராமத்தில் டெம்போ டிரைவரை கல்லால் தாக்கி பணத்தை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமாரி மாவட்டம் அஞ்சுகிராமத்தை அடுத்த லட்சுமி புரத்தை சேர்ந்தவர் காளியப்பன் மகன் மகேஷ் (28). இவர் மினி டெம்போ ஓட்டி வருகிறார். நேற்று மாலை இவர் காணிமடம் நான்கு வழி சாலை அருகே உள்ள கடை முன்பு மினி டெம்போவை நிறுத்தி பால் வாங்கி விட்டு திரும்பி வரும்போது, மேட்டுகுடியிருப்பு பகுதி சேர்ந்த துரை மகன் அன்பு என்ற அன்பு ராஜன் (25) வாகனத்தின் கதவை திறந்து பர்சை எடுத்துக் கொண்டு ஓட முயன்றார்.

இதை பார்த்த மகேஷ் அதை தடுக்க முயன்ற போது அவரை கல்லால் தாக்கி விட்டு பார்சில் இருந்த பணம் ரூ. 2300 ஐ எடுத்துக்கொண்டு மிரட்டல் விடுத்து சென்று விட்டார். இதில் காயமடைந்த மகேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு அஞ்சுகிராம் அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து மகேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் அஞ்சுகிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து அன்பு என்ற அன்பு ராஜனை கைது செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story