அடுத்த வாரம் திருமணம் நடக்க இருந்த நிலையில் லாரி மோதி என்ஜினீயர் பலி

அடுத்த வாரம் திருமணம் நடக்க இருந்த நிலையில் லாரி மோதி என்ஜினீயர் பலி

செல்வகுமார்

திருவண்ணாமலை வேங்கிக்கால் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ஞானசேகர் செல்வகுமார் மகன் செல்வகுமார் (வயது 30). என்ஜினீயரான இவர், சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு வருகிற 20-ந்தேதி திருமணம் நடைபெற இருந்தது, நேற்று பணி முடிந்ததும், விடுமுறை எடுத்துக்கொண்டு தனது சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். நள்ளிரவு 1 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டியில் சென்றபோது, எதிரே வந்த லாரி, செல்வகுமார் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த செல்வகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார், விபத்து பற்றி தகவல் அறிந்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உயிரிழந்த செல்வகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே விபத்து பற்றி அறிந்த அவரது குடும்பத்தினர் மருத்துவம் னைக்கு விரைந்து வந்தனர். அங்கு அவர்கள் செல்வகுமாரின் உடலை பார்த்து கதறி அழுதனர். அடுத்தவாரம் திருமணம் நடை பெற இருந்த நிலையில் ஐ.டி. ஊழியர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story